12 செப்டம்பர் 2012

ரகசிய இடத்தில் வைத்து உதயகுமாரை சந்தித்த கெஜ்ரிவால்.

 Kejriwal Meet Udhayakumar A Secret Place கூத்தங்குழியில் உள்ள ரகசிய இடத்தில் இருக்கும் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அவர் உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடங்குளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு சரணடைவதாக இருந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை 50 இளைஞர்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்க வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார். அவர் முன்னிலையில் உதயகுமார் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயகுமார் இடிந்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து கெஜ்ரிவால் அங்குள்ள பாதிரியார் பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரகசிய இடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திக்க அவர் இன்று அதிகாலை இடிந்தகரையில் இருந்து படகு மூலம் கூத்தங்குழிக்கு சென்றார். அங்கு அவர் உதயகுமாரை சந்தி்த்து பேசியுள்ளார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உதயகுமாரை சந்தித்து அவரை போலீசில் சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இடிந்தகரையில் போலீசார் நடத்திய தாக்குதலில் 40 படகுகள், 53 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களின் வீடுகளை அடித்து, நொறுக்கிய போலீசார் அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக