18 செப்டம்பர் 2012

இலங்கை நோக்கிப் பயணித்த தீவிரவாதி கைது!

இலங்கைப் நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அல் கய்தா அமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் வைத்து குறித்த நபரை இந்திய க்யூ காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 38 வயதான தமீம் அன்சாரி என அடையாளம்காணப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை தொடர்பான இரகசிய தகவல்களுடன் குறித்த நபர்இலங்கைக்குப் புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமான தகவல்களை இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்திடம்ஒப்படைக்கும் நோக்கில் குறித்த தீவிரவாதி முயற்சித்திருக்கக் கூடும் எனக்குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக