03 செப்டம்பர் 2012

செங்கொடியின் தியாகம், வீரத்தின் அடையாளம் - நினைவு நிகழ்வில் சீமான்!

வீரம் என்பது மற்றவர்களின் உயிரைக் காக்க தன்னுயிரைத் தருவதாகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் தனது அண்ணன்கள் மூன்று பேரின் உயிரைக் காக்க தமிழக மக்களே கிளர்ந்தெழுங்கள் என்று கூறிவிட்டு, தனது உடலை தீக்கிரையாக்கிக் கொண்ட செங்கொடியின் செயல் தியாகமாகும். அதுவே வீரத்தின் அடையாளம். இதனை நான் சொல்லவில்லை, நமது இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் கூறியுள்ளார். எனவே செங்கொடியி்ன் தியாகம் என்றென்றைக்கும் நினைவு கூரத்தக்கதாகும் - இவ்வாறு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மூவரின் உயிர் காக்க தன்னையே தீக்கீரையாக்கிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் முதலாமாண்டு நினைவுப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் சிறப்புரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீரத்தமிழச்சி செங்கொடி தீயைத் தழுவி தனது உயிரை மாய்த்துக் கொண்டது தற்கொலை அல்ல. வாழ்வில் தோற்றுவிட்டோம், கல்வியில் தோற்விட்டோம், தொழிலில் ஏற்பட்ட நட்டம், கடன் சுமையால் விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வது தான் தற்கொலை.
தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் நமது தம்பிகள் மூன்று பேரை காப்பாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று முதலில் கூறப்பட்டது. தமிழக அரசின் அந்த நிலை பின்னர் மாற்றப்பட்டு, மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப் பேரைவையில் நிறைவேற்றப்பட்டது என்றால், அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கியவர் வீரத் தமிழச்சி செங்கொடிதான்- என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக