07 செப்டம்பர் 2012

விடுதலைப்புலிகள் சார்பில் வழக்காடும் சட்டவாளர்களுக்கு சிறீலங்கா அனுமதி மறுப்பு!

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புக்கு எதிரான வழக்கில், சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய சுவிற்சர்லாந்து அரச சட்டவாளர்கள் இந்தவாரம் கொழும்பு வரவுள்ளனர்.
அவர்கள் சிறிலங்காவில் தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இந்தவாரமும் அடுத்தவாரமும் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும், இந்த விசாரணைகளில் பங்கேற்க கொழும்பு வருவதற்கு எதிர்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவனுமதி வழங்க மறுத்து விட்டது.
அரச சட்டவாளர்களுடன் ஐந்து காவல்துறை அதிகாரிகள், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் கொழும்பு வரவுள்ளனர்.
எதிர்த்தரப்பு சட்டவாளர்களுக்கு சிறிலங்கா அரசு நுழைவனுமதி வழங்க மறுத்து விட்டதால், அவர்கள் பேர்ணில் இருந்தவாறு சாட்சிகளிடம் நடத்தப்படும் குறுக்கு விசாரணைகளில் நேரலை காணொலி தொழில்நுட்பம் மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன் மூலம் சாட்சிகளிடம் அவர்கள் கேள்விகளை எழுப்ப முடியும்.
சிறிலங்கா சட்டமாஅதிபர் திணைக்களம் எதிர்த்தரப்பு (விடுதலைப் புலிகளின்) சட்டவாளர்களுக்கு நுழைவனுமதி வழங்க இணங்கிய போதும்,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தலையிட்டு அதை நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக