13 செப்டம்பர் 2012

மெகாலி இலங்கை வருவதையிட்டு கிலிகொண்டுள்ள குணதாஸ.

UNனின் குழுத் தலைவர் மொகாலி குற்றவியல்  தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற நிபுணர்இலங்கை செல்ல உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் தொழிற்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவரான மொகாலி, குற்றவியல் தொடர்பாக தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற நிபுணர் எனவும் சூடான் ஜனாதிபதி அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த குற்றவியல் விசாரணை நிபுணர் இவர் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறுவது போல், மெகாலி, வசதிகளை ஏற்பாடு செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரியோ, நவநீதன் பிள்ளையின் அதிகாரிகள் குழுவின் உதவியாளரோ அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
மெகாலி கூறியுள்ளபடி அவரது இரண்டு செயல் முறைகள் உள்ளன. அவருடன் வரும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் நடத்தப்படும் முதல் கட்ட மீளாய்கள். அதன் பின்னர் மீளாய்வு அறிக்கை என்ற மதிப்பீட்டு அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும். கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும் மீளாய்வு அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச விசாரணை குழு ஒன்றை நியமிக்கப முடியும்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தருஸ்மன் குழுவின் அறிக்கையை போன்றால்லது, ஹெனி மெகாலி விசாரணை குழுவினால் வழங்கப்படும் அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு நியமிக்கப்படும் விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கா விட்டாலும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெகாலியின் அறிக்கை மற்றும் அதற்கு முன்னர் வெளியிடப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை என்பன இதற்கு காரணமாக அமையும்.அத்துடன் தருஸ்மன் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிய விசாரணை ஒன்று நடத்தப்படும். இதன் மூலம் தருஸ்மன் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
ஏற்கனவே எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த ஆரம்ப கூட்டத் தொடருக்கு இலங்கை எதிராக 47 அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன. ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தின் தகவல்களின்படி இந்த நிறுவனங்கள் மெகாலி குழுவினரை இலங்கையில் சந்தித்து சாட்சியங்களை வழங்க உள்ளன.
மெகாலி தான் தங்கும் விடுதி அறையை அவரது அலுவலகமாக மாற்றி கொள்ள அனுமதி உள்ளது. யேமன் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் இவர்கள் இவ்வாறே செய்தனர். எனினும் அண்மையில் இவர்கள் சிரியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பீரிஸ் எதனை கூறினாலும் மெகாலி குழுவினர், அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தவே இலங்கை வருகின்றனர் என்பது மிகவும் தெளிவானது.இந்த பயங்கரமான நிலைமையை மூடி மறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நாம் மீண்டும் ஒரு முறை வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்கால ஆபத்து குறித்தும் எதிர்வுகூறுகிறோம் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக