08 செப்டம்பர் 2012

தமிழகத் தாக்குதல்கள் குறித்து மத்திய அரசுடன் பேசுவேன் - மஹிந்த சூளுரை!

இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இந்திய மத்திய அரசுடன் தாம் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று நேற்றுக்காலை சபாநாயகரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்பின் 58 ஆவது மாநாடு கொழும்பில் நடை பெறுவது பற்றி விளக்கமளிக்க இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
பொதுநலவாய நாடுகளின் நாடா ளுமன்ற அமைப்பின் 58 ஆவது உச்சி மாநாடு இங்கு நடைபெறும்போது இந்தியாவில் இலங்கையர்கள் தாக்கப்படும் விவகாரத்தை அந்த மாநாட்டில் விவாதிக்க முடியாது.
தமிழ்நாட்டில்தான் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின் றன. நாங்கள் மாநிலத் துடன் தொடர் படவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப அவர்களுடன் நாம் தொடர்புபட்டு செயற்பட்டு வருகிறோம். 19ஆம் திகதி நான் இந்தியா செல்லும் போது இதுபற்றி அவர்களுடன் பேசுவேன்.
ஏற்கனவே இலங்கையர்கள் தாக்கப்பட்டபோது நாங்கள் விடுத்த பாதுகாப்பு வேண்டுகோள்களை ஏற்று இந்தியா யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியது. அது எமக்குப் பெரிதும் திருப்தியளிக்கும் விடயமாக உள்ளது.
இவ்வாறான சமயங்களில் நாம் சிந்தித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும். ஒருசில கட்சிகளின் செயற்பாடுகள் மாநில அளவில் நடப்பதை நாம் ஓர் அரசு என்ற ரீதியில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக