06 செப்டம்பர் 2012

பின்னணியில் புலிகள் இருக்கலாம் என்கிறார் கெகலிய.

இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டிருக்கலாம் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இயங்கியிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பயண எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌவானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக