16 செப்டம்பர் 2012

இலங்கையின் அழைப்பின் பேரிலேயே ஐ.நா.பிரதிநிதிகள் வந்துள்ளனராம்!

பாலித கோஹன 
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இருந்து இலங்கை ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம், மனித உரிமை பேரவையிடம் அழைப்பு விடுத்தது. எனினும் பல மாதங்களுக்கு பின்னரே அந்த அழைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான கொள்கை தொடர்பாக இந்த குழுவினர் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பரிந்துரைகளை வழங்கிஈ இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இறுதிக்கட்ட போரின் போது, மனித உரிமை பேரவையின் குழுவினர் இலங்கை செல்வது சம்பந்தமாக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர். தற்போது அந்த எதிர்ப்புகள் அனைத்தும் கீழடிப்பு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் பிரச்சினையை நாங்கள் தீர்த்து கொள்கிறோம். எமது நாட்டின் பிரச்சினையில் எவரும் தலையிடக் கூடாது. எம்மீது போர் குற்றங்களை சுமத்த முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என அரசாங்கத்தினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக