22 செப்டம்பர் 2012

கைதான வைகோ மாலை மரியாதையுடன் விடுதலை!

கைதான வைகோ மாலை மரியாதையுடன் விடுதலைமஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.போராட்டம் நடத்தச் சென்ற வைகோவை, மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்த நிறுத்தனர்.40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்தனர்.இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த பொலிஸார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக