17 செப்டம்பர் 2012

டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரக்கூடாது!

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில் அவருடன் வடபகுதி ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரக்கூடாது என புதுடில்லி வட்டாரங்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பாரதீய ஜனதாக் கட்சியின் அழைப்பினை ஏற்றே அவர் புதுடில்லி செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், காஸ்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளமை தெரிந்ததே.
இந்த நிலையிலேயே புதுடில்லி அரசு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரவேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. டக்ளஸ் இந்தியாவுக்கு வருவதன் காரணமாக உள்ளுர் அரசியல், விசேடமாகத் தமிழக மக்களின் எதிர்ப்பினை காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக