14 செப்டம்பர் 2012

மீனவர்கள் போராட்டம் பரவுகிறது!

கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரி போராட்டக்குழுவினர் இன்று 2வது நாளாக இடிந்தகரை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் கடலோர கிராமங்கள் முழுவதும் பரவி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்ப கூடாது, அணு மின் நிலையத்தை மூட வேண்டும், முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று காலை இடிந்தகரை கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சென்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2வது நாளாகவும் போராட்டக்குழுவினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிந்தகரை பகுதி மக்களுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் கடலோர கிராமங்களுக்கு பரவி வருகிறது. தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இன்று காலை மீனவர்கள் படகில் கறுப்புக்கொடி கட்டிக்கொண்டு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக