29 செப்டம்பர் 2012

லண்டனில் இன்று தியாக தீபம் திலீபனின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

1987 ம் ஆண்டு மக்கள் புரட்சிக்கு வித்திட்டு அகிம்சை எனும் சொல்லுக்கு சரியான அர்த்தம் கொடுத்து உலகையே வியக்கவைத்து தன் உயிரிலும் மேலாக நேசித்த மக்களுக்காக நீராகரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் தியாகப் போர் புரிந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு லண்டனில் நினைவுவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29.09.2012 இன்று சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சுதந்திரத் தமிழீழ திருநாட்டின் விடுதலைக்காய், தன் உயிர் ஈந்து வீரச்சாவைத் தழுவிய அந்த தியாகச் செம்மல் தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்றி மலர்கொண்டு சிரம்தாழ்த்தி வணங்கிட அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-நிகழ்வு ஏற்பாபட்டுக் குழு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக