11 செப்டம்பர் 2012

மக்களின் பாதுகாப்புக்காக சரணடைய தயார்: சுப. உதயகுமார்

 Reday Surrender With Conditions கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய தயாராக இருப்பதாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
நாங்கள் ஆயுதம் எடுத்து போராடுவதாக இருந்தால் 400 நாட்களுக்கு முன்பே அதை செய்திருப்போம். ஆனால் அமைதி வழியில் போராட்டம் நடத்தியோரை கொடுமையாக தாக்கியிருக்கிறது காவல்துறை. கூடுதலாக போலீஸ் படையை திரட்டி வரப்போவதாக மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க.. வன்முறை தொடராமல் இருக்க நாங்கள் போலீசில் சரணடைய தயாராக இருக்கிறோம்.
மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் போராட்டக் குழுவினராகிய நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக