20 செப்டம்பர் 2012

பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ளது!

பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை நம்பி மோசம் போய்விட்டனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேல்மாகா ணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் முஸ்லிம் சமூ கத் தினர் முஸ்லிம் காங்கிரஸை புறக் கணித் துவிட்டு ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்க வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்காக முஸ் லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து முஸ் லிம் காங்கிரஸாரை வரலாற் றுத்துரோ கிக ளாகவே முஸ்லிம்கள் நோக்குவார்கள் ௭ன்றும் அவர் குறிப் பிட்டார்.
இது குறித்து முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகை யில், கிழக்கு மாகாண தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ௭திரான பிரசாரங்களையே முன்னெடுத்தது. பள்ளிவாசல்களை உடைப்பதை நிறுத்தி ஆளும் கட்சிக்கு ௭திரான சக்தியை கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டும். இதற்காக முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் ௭ன்று மேடைகளில் பேசிய ஹக் கீம் தேர்தல் முடிந்தவுடன் அரசுடன் இணை ந்து முஸ்லிம்களை காட்டிக் கொடு த்து விட்டார்.
முஸ்லிம்களுக்கு ௭திரான அரசு முன் னெடு க்கும் நடவடிக்கைகளுக்கும் முஸ் லிம் காங்கிரஸுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. ௭னவே இனிவரும் கால ங்களில் ஐ.தே.க வின்ஆட்சி ஒன்றுக்காக முஸ் லிம் சமூகத்தினர் செயற்படவேண் டும் ௭ன்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக