01 நவம்பர் 2011

பரிஸில் ஆயுததாரிகளின் தாக்குதலில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதி படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
26.10.1996ஆம் ஆண்டு இதேபாணியில் பாரிசில் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச்சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன், ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்பொழுது இதேபாணியில் பருதி அவர்கள் மீது கைக்கூலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதபாணிகளால் கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக