27 நவம்பர் 2011

எம் மாவீரர் செல்வங்களை போற்றி வணங்குவோம்!

இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்,ஆயிரம் ஆயிரம் சிங்கள இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை களங்களில் வீழ்த்திய எங்கள் மாபெரும் தளபதி பால்ராஜ் அண்ணா,அரசியல் களத்திலே எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பாலா அண்ணா உட்பட்ட ஆயிரக்கணக்கான தமிழீழ,தமிழக வீர மறவர்களை போற்றி வணங்கும் புனிதநாள் இம்மாவீரர் நாள்.இந்த தூய்மையானவர்களை தரிசிக்கும் நன்னாளிலே அவர்களின் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோமாக.எமது தேசியத் தலைவரின் இலட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.தமிழீழ இலட்சியப்போராட்டமானது அற்ப சொற்ப சலுகைகளுக்கான போரல்ல தமிழனது மானத்தை காக்கவும்,உரிமைகளை நிலை நிறுத்துவதற்குமேயாகும்.இன்று இலங்கையிலே தமிழர்கள் எப்படி அடிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணிப்பார்ப்போம்.இப்பொழுதாவது மாவீரர் தியாகங்களை புரிந்து கொள்வோம்!உலகத்தமிழினமே வாரீர் ஒரே இலட்சியத்துடன் போராடுவோம்.தமிழீழ தாயகத்தை அடைவோம்.மாவீரர்களே உங்களை போற்றி வணங்குகிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக