24 நவம்பர் 2011

தொடர்கிறது சிங்களப்படைகளின் அடாவடி!

கிளி, முல்லை மாவட்டங்களில் இராணுவத்தினரின் அடக்கு முறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. மக்கள் கூட்டமாக நிற்கவோ மற்றும் பொது நிகழ்வுகள் நடாத்துவதற்குத் தடை விதித்துள்ளனர்.
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்பப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் பகைப்படங்ளை எடுப்பதுடன் வீடுகளில் வாகனங்கள் இருந்தால் வாகனத்திற்கு முன்பாக நிற்கவைத்து புகைப்படங்களை எடுத்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு வாகனங்களின் இஞ்சின் மற்றும் செசி இலக்கங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதே வேளை கிளிநொச்சி ஜெயந்திநகரில் சாய்பாபா அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது அங்கு வந்த இராணுவத்தினர் இது மாவீரர் தின நிகழ்வாக இருக்கலாம் எனக் குழப்பம் விளைவித்து இந்நிகழ்வைத் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு பொது நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தியது இவ்வாரத்தில் இது இரண்டாவது தடவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக