23 நவம்பர் 2011

வழுக்கி விழுந்ததில் ரத்வத்தையின் மண்டை உடைந்ததாம்!

சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை, வீட்டில் வழுக்கி விழுந்து, தலையில் படுகாயமடைந்த நிலையில் கண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமன்தினம் இரவு வீட்டில் வழுக்கி விழுந்ததை அடுத்து அவர் உடனடியாக கண்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தலையில் படுகாயமடைந்து நினைவிழந்த நிலையில் உள்ள அவருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெனரல் ரத்வத்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள போதும், அவர் தொடர்ந்து நினைவிழந்த நிலையிலேயே இருக்கிறார்.
24 மணி நேரத்துக்கும் மேலாக- நேற்றிரவு வரை அவர் மயக்கநிலையில் இருந்து மீளவில்லை. அவரது உடல் நிலை குறித்து மேலதிக தகவல்களை வழங்க கண்டி மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்து விட்டன.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தை கடும்போக்காளராக இருந்து போரை முன்னெடுப்பதில் தீவிர பங்காற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக