24 நவம்பர் 2011

அனுருத்த ரத்வத்த சிகிச்சை பலனின்றி மரணம்.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த (73) மரணமடைந்தார்.1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார்.
இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய விசுவாத்துக்குரியவராக விளங்கிய ரத்வத்த சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கையின் பிரான சூத்திரதாரியாக விளங்கியிருந்தார். அதேவேளை தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி 1997 முதல் 2002ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 34 மில்லியன் ரூபா பணத்தினையும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களையும் சட்டவிரோதமான முறையில் அபகரித்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டும் ரத்வத்த மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக