13 நவம்பர் 2011

முகாமிலுள்ள மக்களை படுகொலை செய்து பின்புறம் வீசிய சிங்களப்படைகள்!

2009ம் ஆண்டு மேதம் 17 மற்றும் 18ம் திகதி இராணுவத்திடம் சரண்டைந்த பொதுமக்களில் பலரை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக்கொண்றுள்ளனர். இதனைப் பல தமிழர்கள் முன்னர் கூறியுள்ளபோதும் அதனை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சில அதனைக் காட்டுவதாக அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சரணடைந்த பொதுமக்களில் புலிகள் எனத் தாம் சந்தேகித்த நபர்களை இராணுவம் தனியாக அழைத்துச் செல்வது வழக்கம் எனவும் ஆனால் அவர்கள் முகாம்களுக்குத் திரும்ப வருவதே இல்லை எனவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாம்களின் பின்புறத்தில் வைத்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உடலங்கள் முகாமின் பின்பகுதிகளில் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் காணப்பட்டதாக பல சாட்சியங்கள் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். நந்திக்கடல் பகுதியில் வைத்து கண்களைக் கட்டி புலிகள் உறுப்பினர்கள் பலரை இராணுவம் கொலைசெய்ததுபோல தடுப்பு முகாம்களிலும் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு மக்களைக் கொண்டுசெல்லும் போதும் இராணுவம் பலரை இவ்வாறு சுட்டுக்கொண்றுள்ளது. வகை தொகையின்றி சந்தேகப்படும் அனைவரையும் இராணுவம் சுட்டுள்ளது.
இதனை விடக் கொடுமை என்னவென்றால் புலிகளின் முக்கிய உறுப்பினர் சாயலில் உள்ள பல தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொணறது தான். பின்னர் உண்மையான முக்கிய உறுப்பினர்களை தடுப்பு முகாமில் வைத்து இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். அப்போது அவர்கள் ஆச்சரியப்பட்டதும் உண்டாம். வன்னியில் இருந்த சுமார் 3 தடுப்பு முகாமில் இருந்து காணாமல் போன தமிழ் இளைஞர்கள் தொகை மட்டும் 300 ஐ தாண்டும் என்று தற்போது வெளியே வந்துள்ள அகதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் இவர்களை இராணுவம் கொண்டுசென்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக