07 நவம்பர் 2011

தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுக்காதவர் அப்துல் கலாம்,அவர் சொல்லிவிட்டார் என்பதால் நாம் ஏற்க முடியுமா?

தமிழர் நல் வாழ்விற்கு என்றும் குரல் கொடுக்காதவர் - . இந்தியன் என்பதில் பெருமை கொள்பவர் - அப்துல் கலாம்
40கி.மி தொலைவில் நடந்த ஒரு இனப்படுகொலையை பற்றி வாயை திறக்காத இவரை விட சந்தர்ப்பவாத அரசியல்வாதி மேலானவர். தனது ஊரில் இருந்து 100 கி.மி தூரத்தில் நடந்த பரமகுடி கொலைகளை கண்டிக்காதவர்..சொம்பை தூக்கிக்கொண்டு கூடன்குளம் வருகிறார்... இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கபடுமாம்..... நாங்கள் செத்துபோவதை கண்டுகொள்ளாத அப்துல்கலாம் ஒரு விசுவாச அரசாங்க கிளார்க் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும். இவரையெல்லாம் விஞ்ஞானி, தலைவர் என்கிற தமிழர்களை பரிதாபமாக பார்க்கத் தோன்றுகிறது.
அப்துல்கலாம் எளிமையானவர், நேர்மையானவர், ஊழல் கறை படியாத கரங்களை கொண்டவர் என்பதையெல்லாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர் மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவது ஏன்? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஒடுக்கப்பட்ட போதும், படுகொலை செய்யப்பட்ட போதும், தன் சொந்த ஊரிலேயே மீனவர்கள் சுடப்பட்டு வீழ்ந்து கொண்டிருக்கும் போதும் மக்கள் பக்கம் நின்று பாதுகாப்புக்கு குரல் கொடுக்காத இந்த மனிதர் தான் பொறுப்பேற்றிருந்த அணுசக்தி துறைக்கு ஒரு இடர்ப்பாடு என்றதும் மக்கள் பாதுகாப்புக்கு சர்டிபிகேட் வழங்குவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நாம் வைத்திருக்கும் மரியாதை இன்னும் இருக்கிறது. அதற்காக அப்துல்கலாம் சொல்லிவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்துல் கலாம் என்கிற மனித நேயமற்ற ஒரு அரசாங்க கூலிக்கு கண்டனம் தெரிவிப்போம்.... மக்களோடு நிற்காதவன், மக்களை புரிந்து கொள்ளாதவன் யாராக இருந்தாலும் மக்களால் நிராகரிக்கப் படுவான் என்பதை அதிகார பாசிஸ்டுகளுக்கு உணர்த்துவோம்.. அப்துல் கலாம் நிராகரிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல... நம் குழந்தைகளை அவரிடம் இருந்து காப்பற்றவேண்டிய கடமையும் நமக்குண்டு... வெளிப்படையாக அப்துல் கலாமிற்கு கண்டனைத்தை பதிவு செய்வோம்.. கூடன்குளம் போராளிகளுக்கு துணை நிற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக