04 நவம்பர் 2011

ஐ.நா.தங்களை தாங்களே விசாரணை நடத்தலாம் என்கிறார் பீரிஸ்!

இலங்கையில் நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது ஐ.நா. முறைமை தோல்வி கண்டமை தொடர்பாக “அவர்கள் (ஐ.நா.) தங்களைத் தாங்களே விசாரணை நடத்த விரும்பினால் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என்று கொழும்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, “ஐ.நா. தவறிழைத்ததாகத் தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த யூ.என்.எவ்.பி.ஏ.இன் முன்னாள் பணிப்பாளர் தோரயா ஒபாய்ட்டை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக நிலைப்பாடு எதனையாவது இலங்கை கொண்டிருக்கின்றதா? என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கேட்கப்பட்டபோது, “அவர்கள் விரும்பினால் அதனைச் செய்ய முடியும்’ என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
2009 ஜனவரி முதல் மே வரையில் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சுயாதீனமாக தோரயாவால் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அச்சமயம் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப்பிரதிநிதியாக இருந்த நீல்புனேயின் அறிக்கை தொடர்பாக பீரிஸின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
“உதாரணமாக, உணவு விநியோகம் (நிறுத்தம்) தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் (புனே) எழுதியிருந்த அறிக்கைக்கு நேரடியாக முரண்பட்டுள்ளது. அவர் இங்கு களத்தில் இருந்தார். என்ன நடக்கின்றது என்பதை அவர் நேரடியாக அறிந்திருந்தார்’ என்று பீரிஸ் கூறியுள்ளார்.
“என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக தூதுவர்கள் சிலரும் அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்களும் சம்பந்தப்பட்ட குழுவில் இருந்தனர். குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை அவர்கள் யாவரும் அறிவார்கள்’ என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக