11 நவம்பர் 2011

நோர்வே வெளியடவுள்ள அறிக்கை சம்பந்தமான நிகழ்வில் கலந்துகொள்ள மிலிந்த பயணம்.

இலங்கையின் சமாதான முன்னநகர்வுகள் குறித்து நோர்வேயில் இன்று விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில் இந்நிகழ்வில் பங்குகொள்ளவென இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட நோர்வே சென்றுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே மிலிந்த மொறகொடவை நோர்வே அனுப்ப பணித்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிடெஜ் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இவ்வறிக்கையானது கிறிஸ்டியன் மிச்சேல்சன் கல்வியகத்தால் (Christian Michelsen Institute) தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம், 2009 சமாதான உடன்படிக்கை காலம், தமிழ் புனர்வாழ்வு அமையம், புலிகளின் சமாதான செயலகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவை குறித்து அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக