01 நவம்பர் 2011

ஆள் சேர்க்கிறது ஜே.வி.பியின் கிளர்ச்சி குழு!

ஜே.வி.பியில் இருந்து விலகிய கிளர்ச்சி அணியினர், தற்போது, கிராம மட்டத்தில் இருந்து தமது அணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.உயர்தரம் மற்றும் சாதாரண தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி பயின்று வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூர்த்தி அதிகாரிகள் போன்றோரை உறுப்பினர்களாக சேர்ப்பதே இவர்களின் இலக்காக உள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது, வடக்கு கிழக்கு இளைஞர்கள், யுவதிகள் குறித்தும், ஜே.வி.பியின் கிளர்ச்சி அணியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கிளர்ச்சி அணியின் உயர் மட்டத் தலைவர்களின் ஆலோசனையின் பேரில், அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் இணைந்து, தமது அணிக்கான புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக