02 நவம்பர் 2011

பனஞ்சாராயம் கேட்டாராம் பசில்!

சில்ப 2011 கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பனம் சாராயம் இருக்கின்றதா, அது எங்கே…? எனக் கேட்டார்.கடந்த மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மூன்று தினங்கள் சில்ப 2011 கண்காட்சி கண்டியில் சிறிமாவோ பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பங்குபற்றிய பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்திடமே மேற்கண்டவாறு கேட்டார் அமைச்சர் பஸில்.வருடாந்தம் இந்தக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இதில் உள்ளூர் உற்பத்தித் துறைகள் தொடக்கம் சகல துறைகளினதும் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படும்.கண்காட்சியைப் பார்வையிட்டு வந்த சமயம் பனை அபிவிருத்திச் சபையின் காட்சி அறையிலும் நுழைந்தார் அமைச்சர். அப்போது பனம் சாராயம் இருக்கிறதா எங்கே எனக் கேட்டார்.
பனம் சாராயம் விற்பனை செய்வதற்கான தரச்சான்றிதழ் கிடைக்குமாயின் அதனையும் உற்பத்தி செய்து காட்சிப்படுத்த முடியும் என்று பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக