07 நவம்பர் 2011

விடுதலைப் போராட்டம் தோற்றது எதனால்? – லண்டனில் காரணம் சொன்னார் சக்தி எப்எம் குணா! (விளாத்தியடி விண்ணாணம்)

வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் இருக்கிறியளே? புதினங்கள் பல பல விதமாக வருகுது பாருங்கோ… நேற்றுப் பாருங்கோ லண்டனில கூட்டமைப்பின்ர தலைவர் சம்பந்தன் எதிர்காலத் தலைவர் எண்டு சொல்லிக் கொள்ளுற சுமந்திரன் அவையள் பங்கு கொண்ட கூட்டம் ஒண்டு நடந்ததெல்லே?
அதில விசேசம் என்னண்டால் பாருங்கோ, அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை செய்தவர் யார் தெரியுமே? தமிழினத்த பாரிய அழிவுப் பாதைக்குக் கொண்டு போன ரணில் விக்கிரமசிங்கவ தேசியத் தலைவராகக் கொண்டு செயற்படுற மகாராஜா நிறுவனத்தின்ர சக்தி வானொலியில பத்து வருசத்துக்கும் மேலாக பணியாற்றின குணா என்ற நபர் பாருங்கோ. அவர் பாருங்கோ பத்துவருசமா கொழும்பில இருந்திட்டு இப்ப புலத்தில போய் நிண்டு கொண்டு அங்க தேசியத்துக்காக குரல் கொடுக்கிற ஒரு வானொலியில அ(க)றிவிப்பாளராக இருக்கிறேராம்.
இதில என்ன வில்லண்டம் எண்டால் அவர் பாருங்கோ, அங்க வரவேற்புரை செய்யப் போனால் வரவேற்புரை செய்யிறத விட்டிட்டு சுமந்திரன் ஐயா முதல் தரம் லண்டன் போகேக்க அங்க அவர் கதைச்சதில சில இணையத்தளங்கள் கத்தரிச்சு எடுத்து அவருக்கு எதிராக செய்தி போட்டதாகக் கவலப்பட்டவராம். சுமந்திரன் ஐயா என்ன செய்தார், என்ன செய்யிறார் கனடாவில எங்க தங்கினவர் எண்டது இவருக்குத் தெரியுமே? தமிழனத்தின்ர துரோகி டி.பி.எஸ்.ஜெயராஜ் வீட்டில தான் சுமந்திரன் ஐயா தங்கியிருந்தவர் சாப்பிட்டவர் எண்டதெல்லாம் இவருக்குத் தெரியுமே?
இவர் பாருங்கோ கொக்குவில்ல என்ன செய்தநீங்கள், யாழ்ப்பாணக் கம்பஸ் நிகழ்ச்சி ஒண்டுக்கு அறிவிக்க ஆசையாப் போய் அங்க இருந்து கம்பஸ் பொடியள் அடிச்சுக் கலைச்சது, சமாதான காலத்தில வன்னிக்குப் போய் அங்க ஒண்டு இரண்டு ஊடகங்களுக்கும் போய் “நான் முந்தி உங்களோட கொஞ்சநாள் வேலை செய்தனான். ஆனால் அந்த விசயத்தயோ, நான் இப்ப வன்னிக்கு வந்த விசயத்தயோ சக்தியில வேலை செய்யிறாக்களுக்குச் சொல்லிப் போடாதேங்கோ பிறகு வேலை இல்லாமல் பண்ணிப்போடுவங்கள்” எண்டு சொன்னது எல்லாம் எங்களுக்கும் தெரியும் கண்டியளோ? அவர் வந்து பிளைக்கப்போனால் பிளைக்கிற அலுவல பாக்கிறதவிட்டிட்டு தேசியம் பற்றியும், தேசியத்தின்ர பாதையில நிக்கிற இணையத்தளங்கள் பற்றியும் கதைக்கிறதுக்கு அவருக்கு அருகதை இல்லை எண்டத அவர் புரிஞ்சு கொள்ளவேணும் கண்டியளோ?
சக்தியில இருக்கேக்க அடுத்த பணிப்பாளரா வாறதுக்கு எனக்குத் தான் தகுதி இருக்கு, எனக்குத் தான் தகுதி இருக்குது எண்டு புலம்பிப் புலம்பி கடைசில ஒண்டும் நடக்கேல்ல கண்டியளோ? புதிசா தேசியம் பற்றி வகுப்பெடுக்கிறதுக்கு நீங்கள் லண்டனில யாரையும் பாருங்கோ, எது சரி? உண்மையான தேசிய வாதியள் ஆர் ?ஆர்? எண்டுறது எங்களுக்கும் தெரியும்.
ஆனால் பாருங்கோ, நீங்களே எங்கட போராட்டத்த விமர்சிக்கிற அளவுக்கு உங்களுக்குத் தகுதி இருக்குதோ? எண்டத உங்கள நீங்களே கேக்க வேணும் பாருங்கோ. “எந்த விசயத்தையும் வெளிப்படையாக கதைக்க வேணும், அப்பிடி கதைக்காததால தான் எங்கட கடந்த காலப் போராட்டம் தோல்வி அடைஞ்சது” எண்டு லண்டனில எங்கட மக்களுக்கு முன்னால மேடையில சொல்லுற அளவுக்கு நீங்கள் வந்திட்டியள் என்ன? காலம் எப்பிடி எப்பிடி எல்லாம் மாறும் எண்டதுக்கு நீங்கள் ஒரு பெரீய உதாரணம் கண்டியளே?
யார் யாரோ? தேசியத்துக்காக உயிரக் குடுத்து செத்துப்போய், கால் கையள இழந்துபோனது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. இங்க இருக்குமட்டும் இருந்து கொண்டு மஹிந்தவும், ரணிலும் சொல்லுற கோமாளிக்கதையள், சனம் சாகச் சாக மக்கள் சாகவில்லை புலிகளே செத்துப் போகினம் எண்ட எல்லாக் கதையளையும் தலைப்புச் செய்தியா வாசிச்சுத் தள்ளிப்போட்டு இப்ப லண்டன் போய் நிண்டு கொண்டு போராட்டம் அழிஞ்சதுக்கு நீங்கள் காரணம் சொல்லுறியளே? இந்த நூற்றாண்டில நீங்கள் தான் பாருங்கோ பெரிய சோ(ஜோ)க்கர் என்ன?
ம்… தமிழினத்த கடவுள் தான் காப்பாற்ற வேணும் எண்டு சொல்லி தந்தை செல்வா சொன்னது உண்ம தான் பாருங்கோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக