01 டிசம்பர் 2010

சிங்கள ஜனாதிபதி மகிந்தவை பைத்தியமாக்குவோம்!

மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை உலகம் வரையறை செய்துள்ளது. ஆனால் தமிழன் எப்படி வாழவேண்டும் என்பதை காலமும்,களமும்தான் வரையறை செய்திருக்கின்றது. எங்கள் தமிழினத்தின் பல்லாயிர யுகங்களின் பெருமை,முள்ளி வாய்க்கால் முடிவோடு சிதைக்கப்பட்டிருக்கின்றது.
சிங்களம் தமீழீழ மண்ணில் சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து,எங்கள் தமிழீழ மக்களை இரத்தக் கண்ணீர் சிந்தவைத்துள்ளது. விபரிப்பதற்கு இது நேரமுமல்ல,நீங்கள் ரணங்களை மறந்த பிறவியுமல்ல. எங்கள் மண்ணின் வலி துடைக்க,உலகிற்கு எம் நிலையை எடுத்துரைக்க இதுவன்றி வேறொரு கணம் அமையாது.
ஓடாத நதி மாசுபடிந்து குட்டையாகிவிடும்,பாயாத மின்சாரம் இருளடைந்துவிடும் போராடாத இனம் அடிமையாகிவிடும். எங்கள் அடிமை விலங்குடைக்க இது போராடும்வேளை. கித்துறு விமானநிலையத்தை முற்றுகையிட்டதைப் போன்று ஒக்பேட் பல்கலைக் கழகத்தையும் முற்றுகையிடுவோம். எம் இனத்தைக் கருவறுத்த சிங்கள சனாதிபதியை மிரளவைத்து,மண்டை குளம்பவைத்து,ஒக்பேட் பல்கலைக் கழகத்தில் பைத்தியம்போல் உளறவைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
அதனுடன் நின்றுவிடாமல்,ஐரோப்பாவிலுள்ள அனைத்து இங்கிலாந்து தூதுவராலயங்களையும் முற்றுகையிட்டு,போர்க் குற்றவாளி மகிந்தவை கைதுசெய்ய வலியுறுத்துவோம்.
சிலநாட்கள் மக்களுடைய காலடிபட்டால் கல்மலையிலும் வழியுண்டாகும். தொடர்ச்சியான போராட்டம் எமக்குத் தமிழீழத்தைப் பெற்றுத்தரும் என்பது உறுதி.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
german-tamil-eluththaalar-sangkam@hotmail.com

1 கருத்து:

  1. உறவுகளே இந்த வெறிநாய் பக்ஷெயை நீங்கள் வாழும் நாட்டிலிருந்து ஓட ஓட விரட்டியடியுங்கள். இவன் காலடி இனிமேல் எந்த சனநாயக நாட்டிலும் பதியக் கூடாது. இவனது நாட்டிலும் விரைவில் இவனும் இவனது சகாக்களும் சிங்களவர்களால் ஒட ஓட விரட்டப்படுவான் என்பது நிச்சயம்.

    பதிலளிநீக்கு