18 டிசம்பர் 2010

கண்ணாடி பந்துக்குள் இருக்கும் சிறைக்கைதி தான் என்கிறார் மகிந்த.

யுத்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த தான் இன்று கண்ணாடி பந்துக்குள் இருக்கும் சிறை கைதியாக மாறியுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வெலிகத்தேயில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.விமானத்தில் செல்ல முடியாது.விரும்பிய உணவை உண்ண முடியாது. உணவை முதலில் எவரேனும் உண்டு பார்த்த பின்னரே தான் உண்ண வேண்டிள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்திற்கு சென்றால், பிடியாணை பிறப்பிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் பலருக்கு இது குறித்து புரிந்துணர்வு இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கத் தானே வேண்டும்.அனுதாபம் தேட முயற்சிக்கிறானா? இது ஆரம்பம் மட்டுமே இன்னும் இருக்கிறது இன வெறி கொலைவெறியனே.

    பதிலளிநீக்கு