19 பிப்ரவரி 2013

11 ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்கத் தயார்

News Serviceசிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதை இலக்காக கொண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒஸ்ரியா, அயர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவிற்சர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, மொன்ரினிக்ரோ, போலந்து, ருமேனியா ஆகிய 10 நாடுகள், வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக