25 பிப்ரவரி 2013

மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச தர விசாரணைக்கு ஐநா கோரிக்கை!

மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச தர விசாரணைக்கு ஐநா கோரிக்கை மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த மாதம் 12ஆம் திகதிவரை மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து 153 மனிதர்களுடை எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் வைத்திய அறிக்கை எதிர் வரும் மார்ச் மாதம் வெளியிட உள்ளதாக மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஜூன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்ட பிரதேசத்திற்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக