10 பிப்ரவரி 2013

அரசிற்கு எதிராக பலமான கூட்டணி..?

அரசியல் கட்சிகள் 10 மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு தொடர்பான இணக்கப்பாடு நாளை (11) எட்டப்படவுள்ளது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இது தொடர்பான விசேட உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடாத்தும் நோக்கில் இந்த புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
எளிமையான நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய சோசலிசக் கட்சி, புதிய சமசமாஜ கட்சி, புதிய இடதுசாரி கட்சி, மவ்பிம தேசிய முன்னணி, ருஹூனு மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் கட்சி, தமிழ் முஸ்லிம் தேசிய பேரவை உள்ளிட்ட கட்சிகள் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளன.
கூட்டமைப்பு கட்சிகள் ஒன்றையொன்று விமர்சனம் செய்யாது பிரச்சாரங்களில் ஈடுபடுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பாரியளவில் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக