22 பிப்ரவரி 2013

தமிழீழ சுதந்திர சாசனத்தின் அறிமுக கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான அறிமுக பொதுக்கூட்டத்திற்கு கனேடிய - அமெரிக்க தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் தமிழீழத் தேசியத் துக்க நாளான மே-18ம் நாளில் - ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறையவுள்ளார்கள். தென்னாபிரிக்க விடுதலைக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் முரசறைந்த தென்னாபிரிக்க விடுதலை சாசனம் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் முரசறைந்த பாலஸ்தீன விடுதலை சாசனம் ஆகியன உலக வரலாற்றில் முக்கிய பதிவுகளாகவுள்ளன.
இந்நிலையில் உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம், அமையவிருக்கும் தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலக அரங்கில் முன்வைக்கவுள்ளது. இந்த சாசனத்தின் முரசறைவுக்காக இதன் உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை அறியும் பொருட்டு கேள்விக் கொத்தொன்று வெளியிடப்படுவதோடு, தமிழீழ சுதந்திர சாசனத்தின் அவசியத்தினை வெளிப்படுத்தும் கையேடு ஒன்றும் வெளியிடப்படுகின்றது. இந்நிகழ்வில் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்து, மக்களுடன் கருத்துப் பகிர்வு செய்யவுள்ளார்.
காலம்: 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: Auditorium, 1020 Humboldt Parkway - Buffalo, New York 14211
இந்த நிகழ்விற்கு கனடாவில் இருந்து செல்வதற்கான கட்டணமின்றிய பயண ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. Scarborough, Markham, Mississauga, Brampton ஆகிய பகுதிகளில் இருந்து காலை 10மணிக்கு வாகனங்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயண ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு :
Joe Antony 416-854-4143,
Vin Mahalingam 647- 209-4100,
Jegan 716-352-8300(Buffalo),
ஒன்றாய் இணைவோம்! நாளை மலரும் தமிழீழம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக