28 பிப்ரவரி 2013

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும்!

Denise-Rollinsஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இம்முறை அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம், கடுமையானதாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
“பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்குமாறு தனியே அமெரிக்கா மட்டும் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இதே மனோநிலையில் தான் பலநாடுகள் இருக்கின்றன.
சிறிலங்கா அரசுக்கு எதிரான கிளரச்சியை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை.
எந்த இரகசிய நடவடிக்கையிலும் அமெரிக்கா இங்கு ஈடுபடவில்லை.
அவ்வாறு சந்தேகம் கொள்பவர்கள், தற்போதைய திட்டப் பகுதிகளை பார்வையிட முடியும்.
அமெரிக்காவின் உதவித் திட்டங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இதில் சிறிலங்கா அரசு தொடர்புபடவில்லை.
இதே விதிமுறைதான், ஏனைய நாடுகளிலும் அமெரிக்க உதவித் திட்டங்களின் போது கடைப்பிடிக்கப்படுகிறது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக