17 பிப்ரவரி 2013

ப.சிதம்பரம் எங்கே போட்டியிட்டாலும் ஜெயிக்க விடமாட்டோம்: சீமான் ஆவேசம்!

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறயுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் ஆதரவு "அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் வெறுப்படைந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களைய சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக உள்ள கர்நாடகாவில் ஆதரவு திரட்டவேண்டும் என்பதற்காகத்தான் வீரப்பன், ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உள்ளார்கள். ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராவும் இருக்கிறார்கள் என்பது அக் கட்சியினருக்கே தெரியும். இதை திருச்சி வேலுச்சாமி எழுதிய புத்தகம் நன்றாக விளக்குகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக வாய்திறந்தாலே எங்கள்மீது தடைபோடும் காங்கிரஸ் கட்சியினர் ஏன் இதுவரை புத்தகத்துக்கு தடைவிதிக்கவில்லை? தலைமை சரியில்லை எல்லா கட்சியினருமே 40 நாடாளுமன்ற தொகுதியும் எங்களுக்குத்தான் என்கிறார்கள். எத்தனை நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்தியா சரியான பாதையில் போகாது. இந்த நாட்டை, இந்த மக்களை நேசிக்கிற தலைமை இங்கு இல்லை. தமிழினத்தின் விடுதலை இந்தியா மட்டுமின்றி, எந்த நாட்டையும் நம்பி இல்லை. நாங்களே ஏற்படுத்திக்கொள்வோம். தமிழகஅரசின் முழு திட்டங்களும், மின் பிரச்னையால் மறைக்கப்படுகிறது. மின் பிரச்னையும் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. மதுவிலக்கு அமல்படுத்துக குஜராத்தில் மதுவிலக்கு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அம்மாநில முதல்வர் பாராட்டப்படுவதன் பின்னணி அவர் அந்த மண்ணின் மைந்தர், கேரளாவிலும் மதுக்கடைகளுக்கு வரையறை உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் விடியவிடிய வியாபாரம் நடக்கிறது. தெருவுக்கு 2 மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்படும் என்று கூறுவது தவறானது. சிதம்பரத்தை ஜெயிக்க விடமாட்டோம் தமிழினத்துக்கு எதிராகவுள்ள காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், மத்திய மந்திரியாகவும் உள்ள சிதம்பரம் தமிழகத்தைவிட்டு புதுச்சேரி என வேறு எங்கு போட்டியிட்டாலும் அவரையும், அக்கட்சியைச் சேர்ந்தோரையும் தோற்கடிப்போம் இவ்வாறு சீமான் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக