20 பிப்ரவரி 2013

இந்தப் பெண்களுக்கு என்ன நடந்தது?

2009ம் ஆண்டு மே 18ம் திகதி போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்று மாலை டிரக்டர் வண்டி மற்றும் பஸ் என்பனவற்றில் பல ஆயிரக்கணக்கான பெண்களும் இளைஞர்களும் ஏற்றப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் புலிகள் என்று இராணுவம் கூறியது. தாம் சந்தேகப்பட்ட அனைத்துப் பெண்களையும் இலங்கை இராணுவம் விட்டுவைக்கவில்லை. அவர்களை அவர்களது பெற்றோருக்கு, முன்னால் கொண்டுசென்றது இராணுவம். இவர்களில் பலர் இதுவரை விடுதலையாக வில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
சனல் 4 தற்போது வெளியிடவுள்ள, ஆவணப் படத்தில் இக் காட்சிகள் வருகிறது. இப் பெண்களை இலங்கை இராணுவம் டிரக்டர் வண்டியில் ஏற்றிச் செல்வதும், அவர்களைக் கொண்டுசெல்லவேண்டாம் என அவர்களது பெற்றோர் கதறுவதும், தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்று பின்னர் எரியூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக