23 பிப்ரவரி 2013

பெர்லினில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது தமிழ் வான்

berlin_tamilvan_001நீதி கோரி ஐநா செல்லும் தமிழ் வான் யேர்மனி தலைநகரம் பெர்லினில் இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.
நேற்று காலை நடைபெற்ற சந்திப்பில் யேர்மனியில் உள்ள spd கட்சி மற்றும் die Linke எனும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோடு ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விடையமாகவும் தற்காலிக நிலைமை குறித்தும் ஆழமாக உரையாடப்பட்டது.
இவ் உரையாடலில் கருத்துக்கள் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை ஆதரித்து பேசினர். தொடர்ந்து குறிப்பாக தாயகத்தில் சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மிக அக்கறையோடு உரையாடப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் சந்தித்த ஒரு கட்சி, சிறிலங்காவின் மனித உரிமை மீறல் விடையமாக மீளாய்வு செய்து அறிக்கையினை பாராளுமன்றத்தில் எழுத்து மூலமான விவாதத்திற்கு விடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அவ் அறிக்கை அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தொடர்ந்து நவநீதம்பிள்ளை அவர்களிடம் கையளிகப்படும்.
அரசியல் சந்திப்புகளை தொடர்ந்து Berlin ,Brandenburger Tor மற்றும் Gedächtniskirche am Zoo எனும் மக்கள் நடமாடும் இடங்களில் கண்காட்சி வைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விடையங்கள் துண்டுப்பிரசுரம் ஊடாக எடுத்துரைக்கப்பட்டது.
மாலை நேரம் தேசத்தின் அன்னை வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வோடு மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.
தேசியத் தலைவரின் தாயின் திருவுருவப் படத்திற்கு தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைத்து, தொடர்ந்து அனைத்து மக்களும் சுடர்- மலர் வணக்கம் செலுத்தினர்.
அதை தொடர்ந்து சிவந்தன் அவர்கள் புலம்பெயர் மண்ணிலே வெகுசன மக்கள் போராட்டங்களின் முக்கியத்தை எடுத்துரைத்ததோடு, மக்களின் அடித்தளத்தில் மட்டுமே எமது மக்களின் விடிவு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
Duisburg நகரத்தில் இருந்து சிவந்தன் அவர்களோடு இணைந்து தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் செல்வன் லக்சன் அவர்கள் இன்றைய காலத்தில் இளையோர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் சார்ந்து மிக உணர்வுபூர்வமாக விளக்கினார்.
இப்போராட்டத்தை முன்னெடுக்கும் உறுதிஉள்ள இளையோர்களின் தாய்மண் மீது வைத்திருக்கும் உணர்வுகளை மக்கள் கண்டு கண்ணீர் வடித்தனர். அத்தோடு அவர்களின் நீதிக்கான பயணம் நிச்சயம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்தி பெர்லின் தமிழ் மக்கள் சார்பாக தேசிய செயற்பாட்டாளர் சிறி அவர்கள் மலர்செண்டு வழங்கி இளையோர்களை ஊக்குவித்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ் வான் தனது பயணத்தை ஆரம்பித்து அடுத்த நகரங்களாக Hannover மற்றும் Bremen னை சென்றடைகின்றது.berlin_tamilvan_005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக