18 பிப்ரவரி 2013

இரணைமடு விமானத்தளம் சிங்களவர்களின் சுற்றுலா மையம்!

iranaimadu_runway_003விடுதலைப் புலிகளின் விமானப் படைத்தளம் இலங்கை விமானப் படையினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் விமானங்களின் பிரதானமான விமானத்தளமான விளங்கிய இரணைமடு விமானப்படைத்தளமே இவ்வாறு புனரமைக்கப்பட்டு வருகின்றது.
2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தளம் போருக்குப் பின்னர் சிறிலங்கா விமானப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்த விமானத்தளத்திற்கு தமிழர்கள் எவரும் செல்ல இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில், தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு அந்த விமானத்தளம் ஒரு சுற்றுலா மையமாக மாறியிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக