27 பிப்ரவரி 2013

இரு மனப்போக்கில் ஐநா செயலாளர் பான் கீ மூன்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையின் இரு மனப்போக்கு தொடர்ந்தும் காணப்பட்டே வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்துக் காட்டும் நிழற்படங்கள் குறித்து செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு நன்கு தெரியுமென அவரது பேச்சாளர் கடந்தவாரம் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய நிழற்படங்கள் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய ஆவணத் திரைப்படமான போர் அற்ற வலயம் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இத்திரைப்படம் காட்டப்படுவதனை தடுக்கும் விதத்தில் இலங்கை அரசு தற்போது செயற்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக