
ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி இவ்வாறு கூறியுள்ளார்.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் குறித்து வெளியான வீடியோ, படங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மார்டின் நெசர்க்கி, ´நாங்கள் அந்த வீடியோ, படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது´ என்றார்.
அங்கு அவர் மேலும் இலங்கை தொடர்பில் கூறியதாவது,
´இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கே ஆகும். இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன ஒரு உண்மையான மற்றும் விரிவான தேசிய செயல்முறை மூலம் இடம்பெற வேண்டும் என ஐநா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்´ என மார்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக