14 பிப்ரவரி 2013

சம்பந்தனை சந்திக்க மகிந்த விரும்புகிறாராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்திப் பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும், பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் விடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்குடனுமே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கண்சிகிச்சை ஒன்றுக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். கடந்த மாதம் 5 ஆம் திகதி சம்பந்தனின் பிறந்தநாள் அன்றைய தினம் அவர் இந்தியாவில் இருந்தார். ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதன் போது, நாடு திரும்பியதும் உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி சம்பந்தனிடம் கூறியுள்ளார். அதற்கு நாடு திரும்பியதும் பார்க்கலாம் என்று சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
தற்போது இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மிகக் கடுமையான நெருக்கடி ஏழுந்துள்ளது. இந்த மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக காட்டமான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியைச் சந்திப்பதைச் சம்பந்தன் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக