17 பிப்ரவரி 2013

சாவகச்சேரி வைத்தியசாலையில்; இட நெருக்கடியால் திண்டாடும் நோயாளர்

hospitalசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் கிளினிக்குகளில் இடநெருக்கடி ஏற்படுவதால் இருப்பதற்கு இடமின்றி நோயாளர்கள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது என்று பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி உதயனுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கிடைத்த தகவல்கள் வருமாறு:
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கண், தோல், குழந்தைகள், பல் சார்ந்த கிளினிக்குகள் வைத்தியசாலை நிர்வாக அலகுக் கட்டத்தின் மேல் மாடியிலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், போசாக்கு குறைந்த பிள்ளைகள் போன்ற கிளினிக்குகள், சிறுவர் விடுதியிலும் இடம்பெறுகின்றன.
உளநலம், கசம், புற்றுநோய் ஆகியவற்றுக்கான கிளினிக் அதற்கான கட்டடத்திலும், நீரிழிவு, பொது மருத்துவம் உட்பட ஏனைய கிளினிக்குகள் தனியான கட்டடத்திலும் இயங்குகின்றன.
நிர்வாக அலகு, குழந்தைகள் விடுதி, உளநலம் உட்பட்ட கிளினிக்குகள் இடம்பெறும் இடங்களில் தலா 50 தனியான இருக்கைகளும், பொது மருத்துவம், நீரிழிவு உட்பட்ட கிளினிக்குகள் நடைபெறும் இடத்தில் தலா 6 பேர் வீதம் இருக்கக் கூடிய 18 வாங்குகளும் காணப்படுகின்றன.
முறைப்பாடு தெரிவித்த நபரின் கூற்றுப் பிரகாரம் அது பொது மருத்துவக் கிளினிக் நடைபெறும் இடம் என்று நினைக்கிறோம். நீரிழிவு மற்றும் பொது மருத்துவம் ஆகிய கிளினிக் நடைபெறும் வேளைகளில் அங்கு வரும் நோயாளர்களின் நலன்கருதி பொது வைத்திய நிபுணர் உட்பட ஐந்து வைத்திய அதிகாரிகள் கடமையில் உள்ளனர்.
நோயாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு கிளினிக் கொப்பியில் எழுதப்படுகிறது. காலை 8 மணி குறிப்பிட்டிருக்கும் ஒருவர் காலை 7.30 மணிக்கு வந்து கொப்பியை அடுக்கி விட்டு வாங்குகளில் வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கொப்பிகளை எடுத்து பதிவுகள் செய்தபின்னர் வரிசைக்கிரமமாக உள்ளவர்களிடம் வழங்குவார். ஒரு மணித்தியாலத்தில் 50 தொடக்கம் 60 நோயாளர்கள் சோதிக்கப்பட்டு மருந்துகள் எழுதப்படும்.
9 மணியெனப் பதிவு செய்தவர்கள் 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் வந்து கொப்பி அடுக்க வேண்டும். இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு நோயாளர்கள் சிரமமின்றிச் சிகிச்சை பெறமுடிகிறது.
கிளினிக் கொப்பி பார்த்து குறிப்பிட்டுள்ள நேரம் குறிப்பிட்ட இடத்தில் கொப்பிகளை அடுக்குவதற்கு ஓர் உத்தியோகத்தர் கடமை புரிகிறார். 11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் அங்கு குறித்த நேரம் வரை காத்திருக்க வேண்டும்.
நேரம் முந்தி வருபவர்கள் கிளினிக் மருந்து கொடுக்கும் பகுதி விறாந்தையில் தங்கி தமது நேரம் வரும் போது இருக்கையில் அமர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறாக நேரம் தவறி வருபவர்களே நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.
11 மணிஎன நேரம் குறிப்பிட்ட ஒருவர் கொப்பியைக் கொண்டு காலை 8 மணிக்கு வருவாராயின் அவர் காத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக