26 பிப்ரவரி 2013

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மூன்று அமைப்புக்கள்!அலறுகிறது திவயின

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனி உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மூன்று தரப்புகள் செயற்பட்டு வருவது தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த மூன்று தரப்பிற்கும், அமெரிக்காவில் செயற்படும் மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் மேற்குலக நாடுகளும், புலம் பெயர் புலிகள் அமைப்புகளும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.
மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு இலங்கைக்கு எதிராக 04 அமைப்புகள் அறிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதுடன் அவர்கள் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக