26 பிப்ரவரி 2013

இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு அனுப்பிய இரகசியத் தகவல்

salman-periesஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, எதிர்க்காமல் இருக்கும்படி சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவல், சிறிலங்கா அரசாங்கத் தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாக, தகவல்கள் கூறுகின்றன.
ஜெனிவாவில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், பெரும் எண்ணிக்கையான உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றும், அது சிறிலங்காவுக்கு பாரிய தோல்வியை ஏற்படுத்தும் என்றும் சல்மான் குர்சித் அந்த இரகசியத் தகவலில் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க, சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சல்மான் குர்சித்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக