03 ஜனவரி 2012

தேசியத் தலைவரின் அஞ்சல் தலைகளால் தயான் ஜெயதிலகவின் தலை உருளுமா?

பிரான்சில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் உருவப்படம் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் வெளியாகியிருப்பது சிறிலங்கா அரசைப் பெரிதும் குழப்பமடையச் செய்துள்ளது.
இந்த அஞ்சல் தலைகள் வெளியாவதைத் தடுக்க இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து பாரிசில் உள்ள சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக மீது கொழும்பு கடும் சீற்றமடைந்துள்ளது.
இந்தநிலையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாரிசில் உள்ள சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக, விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் வெளியாகியுள்ள அஞ்சல் தலைகளுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“இந்த அஞ்சல் தலைகளை பிரெஞ்சு அஞ்சல்துறை வெளியிடவில்லை. விடுதலைப் புலிகளே வெளியிட்டுள்ளனர்.
பிரெஞ்சு அஞ்சலகங்களில் இந்த அஞ்சல் தலைகள் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், பிரெஞ்சு குடிமக்கள் தனிபட்ட ரீதியில் அஞ்சல் தலைகளை வடிவமைத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோக்கிக் முடியும்.
பிரபாகரனின் படத்துடன் கூடிய அஞ்சல் தலைகள் இதன் அடிப்படையில் தான் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்துப் பேச முயன்று வருகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரான்சில் நேற்று இந்த அஞ்சல் தலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக மற்றொரு கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அஞ்சல்தலைகள் ஒவ்வொன்றும் 60 யூரோ சதம் பெறுமதி கொண்டவை என்றும் அநத ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக