20 ஜனவரி 2012

புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிக்காது என்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு புலம் பெயர் தமிழர்களை குறிப்பிட்டு ஆவேசப்பட்டு பேசியுள்ளார்.
புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பல நாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் - பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளர்.
வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். எனவே புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக