
குறித்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் “பைக்கோ’ வின் உதவியுடன் மண்ணை அகழ்ந்து வேறு பகுதிகளுக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்தத் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த கல்லறைகள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், இப்போது இராணுவத்தினர் மண்ணை அகழ்ந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், இறந்த போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த இடத்தை அகழ்வது அவர்களின் எலும்புக் கூடுகளை அகற்றுவதற்கே என்றார்.
குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நோக்கத்துடனேயே இந்த எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் அகற்றும் வேலைகள் நடக்கின்றன என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக