19 ஜனவரி 2012

பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு செனட்சபை உருவாக்கப்படவுள்ளதாம்!

சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை செனற் சபையில் உள்வாங்குவதன் மூலம் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க முடியும் என்பதனாலும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிரத்தரத் தீர்வு காணும் வகையிலும் செனற் சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற (19) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒத்தியங்கல் கொண்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் இந்த செனற் சபை உதவும் எனக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக