24 ஜனவரி 2012

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தீர்மானிக்கட்டும்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையைக் கவனத்தில் எடுப்பது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.
நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்த அறிக்கை இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்தில் உள்ளது. அவர்களுக்கு அதை நாம் அனுப்பி விட்டோம். அவர்களே அதனைக் கவனிப்பர்.“ என்று மார்ட்டின் நெஸ்ர்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் போரின் போது ஐ.நாவின் கடற்பாடுகள் குறித்து நடத்தப்படும் ஆய்வுகள் இன்னமும் முடிவடையவில்லை என்று்ம் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கென தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நா அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக