08 ஜனவரி 2012

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக ஜே.வி.பியின் கிளர்ச்சிக்குழு பிரான்சில் போராட்டம்.

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்றுள்ள கிளர்ச்சிக் குழுவினர் பிரான்ஸில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமே அண்மையில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் ஆகும். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் கடத்தல், காணாமல் போக்குதல் போன்ற சம்பவங்களுக்கு எதிராக இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை அண்மையில் நடத்தியிருந்தனர். வர்ண டீப்த ராஜபக்ஷ என்பவர் தலைமையில் செயற்படும் இந்தக் குழுவினர் இலங்கை அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைத் தமிழிலும் வெளியிட்டு பிரான்ஸின் பல இடங்களிலும் விநியோகித்தும் வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக