04 ஜனவரி 2012

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழு யாழ்,செல்கிறது.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் செல்கிறது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தனக்கு அறிவித்துள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பாட்டொன் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர் கிருஷ்டக்கன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பர்.
இந்தக் குழு இன்று வடமாகாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை இன்று காலை வவுனியாவில் சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழு பின்னர் 4.30 மணிக்கு ஹெலி மூலம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை சென்றடையவுள்ளது. ‘
இதன் பின்னர் மாலை 5 மணியளவில் இவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்போது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக